Logo of Tirunelveli Today

தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

January 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர்ச்சந்தை பூக்கள் விற்பனைக்கு பெயர் பெற்றதாகும். இங்கு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டத்தில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்துக்கும் இங்கிருந்து பூக்கள் வாங்கிச் செல்லப்படும் நிலையில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.750-க்கு விற்பனையான பிச்சி பூ நேற்று ரூ.1,500 உயர்ந்து 2,250 ரூபாய்க்கும், ரூ.700-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.1100 உயர்ந்து ரூ.1,800-க்கும், அரளி பூ கிலோ ரூ.80, முல்லை பூ ரூ.2,000, சம்பங்கி ரூ.400, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.40, தாமரை பூ ஒன்று ரூ.10, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.70, ஸ்டெம் ரோஸ் ஒரு கட்டு ரூ.270, மஞ்சள் கேந்தி ரூ.45, சிவப்பு கேந்தி ரூ.55, மஞ்சள் செவ்வந்தி ரூ.100, வெள்ளை செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.120 என்ற விலையில் விற்பனையானது. இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், பூக்களின் விலை தினம் தினம் வரத்தை பொறுத்து மாறுபடும் நிலையில், நாளை முகூர்த்த நாள் என்பதாலும், பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், பிச்சி மற்றும் மல்லிகை பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify