Logo of Tirunelveli Today

திருச்செந்தூரில் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கொடியேற்றம்

August 17, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா 17- 8 -2022 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் மிகவும் சிறப்பாக தொடங்கியது .

வருடம் தோறும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த வருடமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிய கொடியேற்றம் கோலாகலமாய் நடைபெற்றது.

புதன்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து மாலை கொடிபட்ட வீதி உலா நடைபெற்றது.

14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறை யான 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டலத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அந்த கொடிபட்டத்தை மூன்றாம் படி செப்பு ஸ்தலத்தார் பாலசுப்பிரமணிய ஐயா யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு ஊர் வீதி உலா எடுத்து வந்தார்.

திருக்கோவில் ஐதிக படி சேர்த்த பிறகு கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை திருக்கோவிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மூன்று மணிக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனை விழா என அனைத்து நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது .

அதிகாலை கொடிபட்டம் வீதி உலா வந்து செப்பு கொடி மரத்தில் காப்பு கட்டிய ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார்.

இதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை அனைத்தும் நடைபெற பக்தர்கள் அனைவரும் தெய்வீக தரிசனத்தை கண்டு களித்தனர்.

அன்றும் மாலை அப்பர் சுவாமிகள் திருக்கோவிலில் தங்க சப்பரத்தில் புறப்பட்டார் . திரு வீதியில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி இரவு தந்தபல்லக்கில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திர தேவருடன் ஒன்பது சன்னதியில் வரும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது .விழா ஏற்பாடுகளை திருக்கோவில்
தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Image source: dinamani.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify