செய்திக்குறிப்புகள்:
- விளையாட்டு விடுதியில் மாணவர்கள் சேர்க்கை.
- அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடல் தகுதி தேர்வு.
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனை புரிவதற்கு உரிய பயிற்சி, சத்தான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வழங்கும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு பள்ளிகளின் விடுதியில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சேர்வதற்குண்டான உடற்தகுதி தேர்வுகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்களுக்கான தடகளம், குத்துச் சண்டை, வாள் சண்டை, கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட இருபது விளையாட்டுகள் மற்றும் மாணவிகளுக்கான தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி உள்ளிட்ட பதினாறு விளையாட்டுகள் ஆகியவற்றுக்கான உடல்தகுதி தேர்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த சுமார் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.