Logo of Tirunelveli Today

3வது நாளாக நாளாக ‌தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

July 25, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தீப்பிடித்தது.
  • மூன்றாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்.

தீ எனும் வார்த்தையில் தான் எத்தனை துன்பங்கள். துவள்வதும் பின்பு எழுவதும் … என சில சமயங்களில் போராட்டங்கள் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது. இது போலதான் நேற்று ஒரு நிகழ்வு நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட சொந்தமான குப்பை கிடங்கு இராமையன்பட்டியில் அமைந்து உள்ளது. திடீரென்று எதிர்பாராத விதமாக ராமையன்பட்டி குப்பை கிடங்கு கடந்த 22 ஆம் தேதி தீ பிடித்தது.

காற்று பலமாக வீசியதால் குப்பை கிடங்கில் பிடித்த தீ கட்டுக்குள் வரவில்லை. தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர் .

மாநகராட்சியின் குடிநீர் வாகனங்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் பேட்டை , பாளையங்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயணைப்பு வீரர்கள் செயல் பட்டு வருகின்றனர்.

பொக்லைன் இயந்திரங்களால் மண்ணை அள்ளிக் கொட்டியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வரும் இந்த நிலையில் தீயால் எழுந்துள்ள புகை மண்டலத்தால் ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் அவதிக்குள்ளாகி துன்பப்பட்டு வருகின்றனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பது நெருப்பு என்றாலும் அந்த நெருப்பே சில சமயங்களில் நமக்கே துன்பம் தரவும் செய்கின்றது.. ஏன்! எதற்காக!யார் இதற்கு காரணம்! என்பதை உணர்ந்து முன் ஜாக்கிரதையாக ஒவ்வொருவரும் இருந்து செயல்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என்று திருநெல்வேலி டுடே தன்னுடைய கருத்தை முன் வைக்கின்றது.

Image source: maalaimalar.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify