Logo of Tirunelveli Today

பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ 3 லட்சம் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

August 29, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • சீர் மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான ரூ 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.
  • நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் அமைப்பதற்காக இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான நிதி உதவியை அரசு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்கள் நவீன சலவையகங்கள் அமைக்கவும், ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கவும் பொருளாதார மேம்பாட்டு தொடர்பாக மானியம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உதவி ரூ 3 லட்சம் வழங்குவதற்கு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அந்த தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். தொழிலில் முன் அனுபவம் பெற்ற சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் . அதுபோலவே தையல் தொழிலில் முன் அனுபவம் கொண்டவர்கள் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கு பத்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும் .

அந்த குழுவினர் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்க ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் செயல்படும் சீர் மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify