- நெல்லை மானூர் அருகே அழகிய பாண்டியபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு முகாமில் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அழகிய பாண்டியபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஐ.ஓ. பி வங்கி தொடங்கி 10வது ஆண்டு நிறைவு பெறுகிறது . அதை முன்னிட்டு இந்த முகாம் நடைபெற்றது. நெல்லை மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் ஐ.ஓ. பி வங்கி, அகர்வால் கண் மருத்துவ இணைந்து இந்த முகாமை நடத்தினர்.
அழகிய பாண்டிபுரம் மேலாளர் சிட்டிபாபு முகாமிற்கு தலைமை தாங்கினார் . ஆனந்த் யூனியன் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் ,பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் ஆகியோர் முன்னிலை வகிக்க மேலாளர் சிட்டிபாபு உரையாற்றினார் .
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் வீட்டு கடன் என ரூபாய் 1.52 கோடி கடன் வழங்கி இருக்கின்றோம் . இந்த பகுதி மக்களின் வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளும் உயர்வதற்கு உறுதுணையாய் இருப்போம் என்று கூறினார் .
மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு முகாமில் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை நடைபெற்றது . முடிவில் அழகிய பாண்டியபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் மாணிக்கம் அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
Image source: dailythanthi.com