Logo of Tirunelveli Today

ஒளிமிகு பாரதம் , ஒளிமயமான எதிர்காலம் மின் சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா

July 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • வள்ளியூரில் சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் மின்சார பெருவிழா நடைபெற்றது.
  • தேர்பவனி நடைபெறும் ரத வீதிகளில் மின் விபத்தை தடுக்க புதைவடங்கள் அமைக்க வேண்டும் ‌பேரவை தலைவர் அறிவுறுத்தல்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஜூலை 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின் சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது.

இந்த விழாவினில் சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமை தாங்கி பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது ;

தமிழ்நாட்டை பொறுத்தவரை மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகின்றது. மத்திய மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக சேர்ந்து மின்சார உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது..

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும் . அப்படி வழங்கவிட்டால் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் நிலை ஏற்படும். அதை கருத்தில் கொண்டுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் அவரது வழியில் வந்த முதலமைச்சர் மு க .ஸ்டாலின் அவர்களும் செயல்படுகின்றனர். .விவசாயிகள் அலைக்கழிக்கப்படாமல் அவர்களது கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சபாநாயகர் பேசுகையில்….

திருவிழா காலங்களில் தேர் பவனி தேரோட்டம் நடைபெறும் . ரத வீதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும், உப்பு காற்றால் மின்கம்பிகள் பாதிக்கப்படாத வண்ணம் புதைவடம் மின்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதைவடத்திற்கான மதிப்பு எவ்வளவு என்று தயார் செய்து தாருங்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் . அதற்கான வசதிகளை நான் பெற்றுத் தருகிறேன் என்று கூறினார் .

மின்வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் வளன்அரசு, இளநிலை பொறியாளர்கள் ஜெகதீஷ், தி.மு.க ராதாகிருஷ்ணன் , அன்பரசு, காவல்கிணறு அழகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify