தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19/02/2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வாக்காளர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவை அடங்கிய வாக்குச்சாவடி சீட்டு அச்சடிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ரகுமத்துலாபுரம் மேற்கு, வடக்கு ரத வீதி பகுதி, சிவன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்ற வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்கும் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சாருஸ்ரீ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.