திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் வரும் 13/02/2022 அன்று பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு ஓவியப்போட்டி "மன்னுயிர் காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது எல்.கே.ஜி - யு.கே.ஜி ஒரு பிரிவாகவும், ஒன்றாம் வகுப்பு - இரண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், மூன்றாம் வகுப்பு - நான்காம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஐந்தாம் வகுப்பு - ஆறாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஏழாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஒன்பதாம் வகுப்பு - பத்தாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், பதினோராம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும் என மொத்தம் 7 பிரிவுகளில் நடைபெற உள்ளதாகவும், இந்த ஓவிய போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான A3 தாள் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் மூன்று சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும், பயிற்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.