Logo of Tirunelveli Today

வி.கே புரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி!

March 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு கபடி போட்டி
  • நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூரில் வரும் 18/03/2022 அன்று முதல் 20/03/2022 வரை நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் கலந்து கொள்ள தகுதி வாய்ந்த திருநெல்வேலி மாவட்ட வீரர்களை தேர்ந்தெடுக்கும் கபடி போட்டி கடந்த 02/03/2022 அன்று முதல் 05/03/2022 தேதி வரை விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள அகஸ்தியர்புரத்தில் வைத்து நடைபெற்றது.

மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிக்கான ஏற்பாட்டை முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்கள் ஏற்பாடு செய்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் துவங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மாநில அளவிலான கபடி போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify