Logo of Tirunelveli Today

நெல்லை தாமிரபரணி ஆற்றில் 79 விநாயகர் சிலைகள் கரைப்பு

September 5, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஊர்வலமாக 79 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 31-8 - 2022 அன்று கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்வது நடந்து வருகின்றது. இந்த ஆண்டும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்து வந்தனர். மேலும் பல அமைப்புகள் தங்களுடைய அமைப்பு சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பாடு நடத்தி வந்தனர்.

அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் முறையாக தினமும் பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கங்கே பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் புறநகர் பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. அனைத்து சிலைகளையும் மாவட்டத்தின் 12 இடங்களை குறிப்பிட்டு , கரைப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று மதியம் விநாயகர் சிலைகள் ஆட்டோ, லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டது. தெருக்கள் வீதிகளில் பிரம்மாண்டமாக செல்லும் விநாயக பெருமானை பொதுமக்கள் பக்திமயத்தோடு வணஙகினார்கள்.

அனைத்து விநாயகர் சிலைகளும் போலீஸ் பாதுகாப்போடு ஆற்றுக்குள் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. . தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் தயாராக நின்ற நிலையில் பக்தர்களிடம் இருந்து சிலைகளை வாங்கிச் சென்று ஆழமான பகுதியில் சென்று கரைத்தனர்

நெல்லை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் , இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify