செய்திக்குறிப்புகள்:
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு.
சிவகாசி அரசு கல்லூரியில் மதுரை சரக திரு.பொன்னி டி.ஐ.ஜி ஆய்வு.
விருதுநகர் மாவட்டம்., சிவகாசி மாநகராட்சி பகுதியில் கடந்த 19/02/2022 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதை ஒட்டி கல்லூரி வளாகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள காவல்துறையினர், கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு அமைத்து உரிய அடையாள அட்டை உள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பணிகளை செய்து வரும் ஊழியர்கள் அனைவரையும் காவல்துறையினர் வீடியோ எடுத்த பின்னரே வாக்கு எண்ணும் கட்டிடத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி அவர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
Image source: dailythanthi.com