விருதுநகர் மாவட்டம்., வத்திராயிருப்பு அருகே அமையப்பெற்றுள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் இந்த கோவில் அமையப்பெற்றுள்ளதால் இங்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் அனைத்து நாட்களும் இங்கு சென்று வர முடியாது. இந்நிலையில் சனி பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை ஒட்டி இன்று முதல் வருகிற செவ்வாய்க்கிழமை வரை சதுரகிரி கோவிலுக்கு காலை மணி முதல் மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பக்தர்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சதுரகிரி மலைக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளலாம்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.