- கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் நீக்கம்.
- காரையார் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்த அனுமதி.
திருநெல்வேலி மாவட்டம்., பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை மீது அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில். களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்குள் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதி அளித்தாலும், கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு படையலிட்டு வணங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழக்கம்போல் படையலிட்டு வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சொரிமுத்து அய்யனார் கோவிலில் படையலிட்டு வழிபட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image source: dailythanthi.com