Logo of Tirunelveli Today

சாலை விபத்து குறைய நடவடிக்கை துணை போலீஸ் கமிஷனர் பேட்டி

July 7, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பாளையங்கோட்டை திறப்பு விழாவில் அறிவிப்பு

நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க போவதாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தெரிவித்தார் .

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் சாலை வாகன போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதற்கான போக்குவரத்து போலீஸ் திட்டம் அமைக்கப்பட்டது

இதனுடைய திறப்பு விழா மற்றும் ஹெல்மெட் முக கவசம் அணிவது குறித்த நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் கலந்துகொண்டு முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பற்றி பேசினார்.

மோட்டார் சைக்கிளில் முக கவசம் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பான அல்வா வழங்கி பாராட்டு தெரிவித்தார் .

போக்குவரத்து போலீஸ் பூத் மையத்தை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், ஏட்டு கௌரியிடம் பூஜை ரிப்பன் வெட்டி திறக்க செய்து, துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது

நெல்லை மாவட்ட மாநகரப் பகுதிகளில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் . ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லுதல் போன்ற போக்குவரத்து வழக்குகள் தினசரி 1200 முதல் 1500 வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் , நம்பர் பிளேட் இல்லாமல் ஓடும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டுவது, மூன்று பேர் பயணிப்பதும் பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை மீறி வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அனைவரும் விழிப்புணர்வோடு இருங்கள் என்று கூறினார்.

இன்ஸ்பெக்டர் பேச்சு முத்து,உதவி போலீஸ் கமிஷனர் முத்தரசர் , சப் இன்ஸ்பெக்டர் பாண்டி , கருத்துப் பாண்டியன் ராபர்ட் டென்சிங் உள்பட பலர் கலந்து இந்த போக்குவரத்து திறப்பில் கலந்து கொண்டனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify