Logo of Tirunelveli Today

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் அணை நீர்மட்டங்கள் உயர்வு

July 5, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • தென்காசி மாவட்டங்களில் நேற்று 24 மணி நேரம் பெய்த மழையால் அணை நீர்மட்டங்கள் உயர்ந்தது.
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்வதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு

நெல்லை தென்காசி மாவட்டத்தில் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது.

அணைகளின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்து பெய்வதால் அனைத்து அணைகளின் நீர்மட்டமும் மளமளவென்று உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் நீர்மட்டம் 50, 70 அடியாக இருந்தது. நெல்லை மாவட்டத்தின் முக்கியத்துவமான அணைகளில் ஒன்றான இந்த அணையில் ஒரே நாளில் இரண்டு அடிக்கும் அதிகமாகி நீர்மட்டம் நேற்று 52.90 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1882 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 704 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் 64.47 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்து 71.19 அடியாக உயர்ந்தள்ளது . 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நேற்றைய நீர்மட்டமோ இப்பொழுது 76.60 அடியாக உள்ளது. இந்த மழை வரவால் மணிமுத்தாறு அருவிக்கு நீர் போக்குவரத்து அதிகரித்து இருக்கின்றது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify