செய்திக்குறிப்புகள்:
- தென்காசி மாவட்டங்களில் நேற்று 24 மணி நேரம் பெய்த மழையால் அணை நீர்மட்டங்கள் உயர்ந்தது.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்வதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு
நெல்லை தென்காசி மாவட்டத்தில் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது.
அணைகளின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்து பெய்வதால் அனைத்து அணைகளின் நீர்மட்டமும் மளமளவென்று உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் நீர்மட்டம் 50, 70 அடியாக இருந்தது. நெல்லை மாவட்டத்தின் முக்கியத்துவமான அணைகளில் ஒன்றான இந்த அணையில் ஒரே நாளில் இரண்டு அடிக்கும் அதிகமாகி நீர்மட்டம் நேற்று 52.90 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1882 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 704 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் 64.47 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்து 71.19 அடியாக உயர்ந்தள்ளது . 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நேற்றைய நீர்மட்டமோ இப்பொழுது 76.60 அடியாக உள்ளது. இந்த மழை வரவால் மணிமுத்தாறு அருவிக்கு நீர் போக்குவரத்து அதிகரித்து இருக்கின்றது.
Image source: dailythanthi.com