Logo of Tirunelveli Today

நெல்லையில் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்?

February 22, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு.

நெல்லையில் இன்று காலை 8.00 மணி தொடங்கி 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 388 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 19022022 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி, சங்கர் நகர் பேரூராட்சி, நாராணம்மாள்புரம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திலும், அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மகளிர் பள்ளி வளாகத்திலும், களக்காடு நகராட்சி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, திசையன்விளை பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாங்குநேரி நம்பி நகர் மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதுபோல சேரன்மாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், முக்கூடல் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, வள்ளியூர் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வள்ளியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இன்று உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட்டதில் வெற்றி பெற்றது யார் என்பது தெரிய வரும்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify