Logo of Tirunelveli Today

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறவைகள் எண்ணிக்கை உயர்வு!

February 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகம் முழுவதும் வருடம்தோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினர் மூலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 28, 29-ந் தேதிகளில் முதல் கட்டமாக கடலோர நீர்பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் பணி பறவை ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்க புத்தேரி குளம், தத்தையார்குளம், அச்சங்குளம், நரிக்குளம், அழகப்பபுரம், புத்தேரி குளம், இறச்சகுளம், கோதண்டராமர் குளம், வேம்பனூர் குளம், ஆளூர் குளம் ஆகிய 14 குளங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 42 வகையான 5,317 நீர் பறவைகள் மற்றும் 28 வகையான 2002 நிலப்பறவைகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify