Logo of Tirunelveli Today

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை பராமரிக்க காப்பகங்கள் தயார்.

May 19, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெருகிக் கொண்டிருக்கும் இந்த நோய் தொற்றை தடுக்கவும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாநில அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க  மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பகங்களில் கொரோனா  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குழந்தைகளை பராமரிப்பதோடு, கொரோனா நோய்த்தொற்றால்  தனது பெற்றோர்களை இழந்து ஆதரவில்லாமல் தவிக்கும் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக உணவு, உடை மற்றும் கல்வி ஆகியன வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் சுமார்  79 காப்பகங்கள்  மூலம்  இந்த மகத்தான சேவைகள் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்பட்டு  வருவது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் 1098 என்ற இலவச (டோல் ஃப்ரீ) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் ஆதரவில்லாமல் தவிக்கும்  குழந்தைகள் பற்றிய தகவல்களை 0462 - 2551953, 9944746791 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக காப்பகங்களில் இருந்து பணியாளர்கள் வந்து அந்த குழந்தைகளை தங்கள் பொறுப்பில் காப்பகங்களுக்கு அழைத்து செல்வார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify