திருநெல்வேலி மாவட்டம்., மானூரில் காவலர்கள் - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானூர் காவல்துறை ஆய்வாளர் முன்னிலை வகிக்க, தாழையூத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. ஜெபராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த விளையாட்டு போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் முதல் பரிசு கானார்பட்டி அணிக்கும், இரண்டாவது பரிசு உக்கிரன்கோட்டை அணிக்கும், மூன்றாவது பரிசு மானூர் காவலர் அணிக்கும் கிட்டியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.