Logo of Tirunelveli Today

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக்கொடி ஏற்றி வைப்பு

August 16, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
  • நெல்லை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் .பள்ளி மாணவ மாணவியர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகள் கண்கவர் விழாவில் கலந்து கொண்டனர் இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தின விழா மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது

நெல்லை மாவட்டம் நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காலை 9-10 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார் அப்பொழுது போலீஸ் இசைக்குழு சார்பில் தேசிய கீதம் பேண்ட் வாத்தியத்துடன் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது . திறந்த ஜீப்பில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சென்று போலீசாருடைய அணிவகுப்பை பார்வையிட்டார்.ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, போலீஸ் நெல்லை மாவட்ட போலீஸ் சரவணன் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆதிதிராவிட நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு திட்டம், தோட்டக்கலை துறை ஆகியவை சார்பில் மொத்தம் 20 பேருக்கு 6, 77 300 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்குதல் நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் துணை மேயர் கே .ஆர். ராஜு, சரவணன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், டி .ஜி பிரவேஷ்குமார், அனிதா ,துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify