திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மானூரில் உள்ள அரசு மாணவர் விடுதியை ஆய்வு செய்த அவர் விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் மானூர் ஊராட்சி பகுதியில் உள்ள பி.எம்.ஒய்.ஏ திட்ட வீடுகளையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கீழ்ப்பிள்ளையார்குளம், பல்லிக்கோட்டை, தேவர்குளம் ஆகிய இடங்களில் மரக்கன்று தொகுப்புகளை பார்வையிட்டு, தேவர்குளத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பனைநார் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தையும் பார்வையிட்டார். பின்னர் மேலஇலந்தைக்குளம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மானூர் ஊராட்சி தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், வட்டாட்சியர் சுப்பு, வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.