Logo of Tirunelveli Today

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை உறுதிமொழி

July 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை விகேபுரம் விக்ரம சிங்கபுரம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
  • எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் நகரங்களின் தூய்மைக்கான இயக்கத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒரு லட்சியத்தை நோக்கி அழகாக பயணிக்க கூடிய பாதையில் உறுதிமொழி என்பது எடுத்தால்தான் ஒவ்வொருவரும் சாதித்து ஜெயிக்க முடியும் . வாழ்க்கைக்காக இருந்தாலும் நாட்டுக்காக இருந்தாலும் அனைத்து விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாபநாசம் தொழிலாளர் நலச்சங்க மேல்நிலைபள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூய்மை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விகேபுரம் விக்ரம சிங்கபுரம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் நகரங்களின் தூய்மைக்கான இயக்கத்தினகீழ் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது

நகரமன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமை வகிக்க..
நகராட்சி ஆணையர் கண்மணி முன்னிலை வகித்தார் .

வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து வழங்குவது பற்றி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியில் பள்ளி அலுவலர் பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் துணிவு ,தைரியம் , தன்னம்பிக்கை ,முயற்சி ,அறிவு , ஆற்றல் அனைத்தும் உள்ளடக்கிய இளமைப்பருவம் வீணே என விழுந்து விடாது ..காலத்தில் பயிர் செய் எனும் பிடியை உறுதியாய் பிடித்து வாழ்விற்கு தேவையான பல உறுதிமொழிகள் எடுத்து வெற்றி காணுங்கள் என இளைய சமுதாயத்திற்கு திருநெல்வேலி டுடே தன் சார்பாக கருத்தை வெளியிடுகின்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify