Logo of Tirunelveli Today

சபாநாயகர் அப்பாவு தலைமையில் செஸ் ஒலிம்பியாட் தொடர்ஜோதி ஓட்டம்

July 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
  • செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய 10 பேருக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது . சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது .ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.

தமிழகம் முழுவதும் இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் , நெல்லை மாவட்டம் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நேற்று முன்தினம் முதல் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஜோதியானது நேற்று இரவு மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்து சேர்ந்தது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் இந்த ஜோதியை பெற்று கொண்டார்.

பாளையங்கோட்டை வ.உ. சி மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வைக்கப்பட்டது.

தொடர்ந்து செஸ் போட்டிகள் அங்கு நேற்று காலை ஏழு மணிக்கு ஆரம்பித்தது. முன்தினம் இரவு முழுவதும் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள் , முதியவர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், சிறப்பாக விளையாடிய 10 பேருக்கும் சபாநாயகர் அப்பாவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இடைத்தொடர்ந்து ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாசகங்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலூன்களை சபாநாயகர் அப்பாவு பறக்க விட, மக்கள் ஆரவாரத்தோடு கையசைத்தனர்.

மேலும் பயண கொடி அசைத்து சபாநாயகர் தொடங்கி வைக்க , அந்த ஜோதி பயணம் அண்ணா விளையாட்டு மைதானம் , காந்திமதி பள்ளிக்கூடம் , நாங்குநேரி வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி மாவட்டம் அடைந்தது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மேயர் பி. எம். சரவணன், துணை மேயர் கே.ஆர் . ராஜு , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ , முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், செஸ் கழக நிர்வாகிகள் பாலகுமார், மணிகண்டன் , மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீநிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify