Logo of Tirunelveli Today

நெல்லையில் 350 இடங்களில் சதுர்த்தி விநாயகர் சிலைகள் வழிபாடு

September 1, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  • நெல்லை மாவட்டத்தில் 350 இடங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் விநாயக பெருமானின் பிறந்தநாள் விழாவான விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் நெல்லை மாவட்டத்தில் போன வருடம் விநாயகர் சிலைகள் வைத்த அதே இடங்களில் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். கருப்பந்துறை ,பேட்டை, கருங்குளம் டவுன் விலாசம் உள்ளிட்ட பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

சிலைகள் வைக்கும் போது அதற்கான வரைமுறைகள் என்ன என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளதாவது ;

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே அனுமதி உண்டு . சிலைகள் வைக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் நிச்சயம் இருக்க வேண்டும் . மின்விளக்கு வெளிச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு பணி தீவிரபடுத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் சுமார் ஆயிரம் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

கமிஷனர் அவிநாஷ்குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா, சீனிவாசன் ஆகியோரின் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சில இடங்களில் வியாழக்கிழமையும், பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விநாயகர் சிலைகள் கடலில் சென்று கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சதுர்த்தி விழாவை சிறப்பித்தனர். சிறப்பு பூஜைகள் அன்னதானம் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify