விருதுநகர் மாவட்டம்., காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சொக்கனேந்தல், மறைக்குளம், பெரிய ஆலங்குளம், சித்தனேந்தல், ஆவியூர், அரசகுளம், மாங்குளம் குரண்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த பகுதிகளில் வெங்காயம் நன்கு விளைந்துள்ளதை அடுத்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயங்கள் அனைத்தும் நோய்த்தாக்குதலுக்கு உட்பட்டு அழுகியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் வெங்காயம் தரமாக விளைந்து, நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.