Logo of Tirunelveli Today

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்! ஆவணமின்றி 50,000க்கு மேல் கொண்டு செல்ல தடை!

February 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று ஆட்சித்தலைவர் அரவிந்த், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் தீவிரமாக பணி புரிய வேண்டும், ஒவ்வொரு சுழற்சி நேரம் முடிந்ததும் காலதாமதமின்றி பணிக்கு வர வேண்டும், அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும், வாகன தணிக்கையின்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணமின்றி இருந்தால் அத்தொகையினை பறிமுதல் செய்ய வேண்டும், மேலும் பறிமுதல் செய்த தொகையை நீதிமன்ற உத்தரவின்படி அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்தும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் வரும் புகார்களின் அடிப்படையில் உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும், வேட்பாளரோ அல்லது வேட்பாளர் சார்பிலான நபரோ பணமோ, பரிசு பொருட்களோ பொதுமக்களுக்கு வினியோகம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல் குறித்து அதன் விபர அறிக்கையினை தினசரி படிவம் பி-ல் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், மாவட்ட ஊராட்சி செயலாளர் முருகானந்தம், உதவி இயக்குனர் (தணிக்கை) மோகன் உள்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify