செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் பாலருவி ரயில் யார்டுக்கு கொண்டு செல்லும்போது அதன் கடைசிப் பெட்டி தடம் புரண்டது.
- பாலக்காட்டில் இருந்து செங்கோட்டை தென்காசி வழியாக திருநெல்வேலி சந்திப்பில் வந்தபொழுது இந்த நிகழ்ச்சி நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாலருவி விரைவு ரயில் யார்டுக்கு கொண்டு செல்லும் பொழுது அதன் கடைசி பெட்டி தடம்புரண்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது . பாலருவி விரைவு ரயில் தினந்தோறும் திருநெல்வேலி- கேரள மாநிலம் பாலக்காடு இடையே இயக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு இந்த ரயில் செங்கோட்டை தென்காசி வழியாக திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை 4. 50 மணிக்கு வந்து அடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு தச்சநல்லூரில் உள்ள யார்டுக்கு சுத்தப்படுத்தும் பணிக்காக ரயில் புறப்பட்ட வேளையில் கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது.
உடனே ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் ,அனைவரும் வந்து ரயில் பெட்டியை மீட்பதற்கு முழு முயற்சி மேற்கொண்டனர். முயற்சி பலன் அளித்து காலை 9 மணிக்கு ரயில் பெட்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது.
பாலருவி விரைவு ரயில் தடம் புரண்டதால் 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்,காலை 9.30மணிக்கு தாமதமாக புறப்பட்டது. 7:20 புறப்பட. வேண்டிய திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் வழக்கம்போல் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டது.
Image source: dailydhanthi.com