Logo of Tirunelveli Today

நெல்லையில் பாலருவி விரைவு ரயில் தடம் புரண்டது

September 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் பாலருவி ரயில் யார்டுக்கு கொண்டு செல்லும்போது அதன் கடைசிப் பெட்டி தடம் புரண்டது.
  • பாலக்காட்டில் இருந்து செங்கோட்டை தென்காசி வழியாக திருநெல்வேலி சந்திப்பில் வந்தபொழுது இந்த நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம் பாலருவி விரைவு ரயில் யார்டுக்கு கொண்டு செல்லும் பொழுது அதன் கடைசி பெட்டி தடம்புரண்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது . பாலருவி விரைவு ரயில் தினந்தோறும் திருநெல்வேலி- கேரள மாநிலம் பாலக்காடு இடையே இயக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு இந்த ரயில் செங்கோட்டை தென்காசி வழியாக திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை 4. 50 மணிக்கு வந்து அடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு தச்சநல்லூரில் உள்ள யார்டுக்கு சுத்தப்படுத்தும் பணிக்காக ரயில் புறப்பட்ட வேளையில் கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது.

உடனே ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் ,அனைவரும் வந்து ரயில் பெட்டியை மீட்பதற்கு முழு முயற்சி மேற்கொண்டனர். முயற்சி பலன் அளித்து காலை 9 மணிக்கு ரயில் பெட்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது.

பாலருவி விரைவு ரயில் தடம் புரண்டதால் 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்,காலை 9.30மணிக்கு தாமதமாக புறப்பட்டது. 7:20 புறப்பட. வேண்டிய திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் வழக்கம்போல் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டது.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify