செய்திக்குறிப்புகள்:
தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்த பொலிந்து நின்ற பிரான்.
திரளான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித் திருவிழா கடந்த 12/02/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் 20/02/2022 மாசி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்ற நிலையில், பத்தாம் திருநாளான நேற்று 21/02/2022 இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.00 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6.00 மணிக்கு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை திருக்கோவிலில் இருந்து தாயார்களுடன், பொலிந்து நின்ற பிரான் புறப்பட்டு, தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் இரவு சுமார் 7.00 மணியளவில் எழுந்தருள, தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.