ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் / நம்மாழ்வார் திருக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 12/02/2022 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து திருவிழாவின் முதல் எட்டு நாட்களும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஒன்பதாம் திருநாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், காலை 6.30 மணியளவில் நம்மாழ்வாா் கேடயத்தில் புறப்பட்டு தேரில் எழுந்தருளினாா். அதனை தொடா்ந்து ஜீயா் சுவாமிகள் முன்னிலையில், காலை 8.30 மணியளவில் திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பத்தாம் திருநாளான இன்று இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழாவும், பதினோராம் திருநாளான நாளை இரவு ஆதிநாதர் பெருமாள் தெப்பத்திருவிழாவும், பன்னிரெண்டாம் திருநாளான நாளை மறுநாள் மாசி விசாக தீர்த்தவரியும் விமரிசையாக நடைபெற உள்ளது.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.