Logo of Tirunelveli Today

அழகிய மணிமுத்தாறு மீண்டும் ஒளி பெற்றது. சூறையால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

May 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்து குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலையில் பயங்கர சூறைக்காற்று மின்கம்பங்கள் சேதம்.
  • உடனடியாக சரி செய்யப்பட்டு மின் கம்பங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

ஜில்லென்று காற்று வீசும் ஆனந்தத்தை அனுபவிக்கும் மக்கள் அதே காற்று சூறைக்காற்றாய் வீசினால் அதை‌ தாங்காது அவதிப்படத்தான் செய்கின்றனர்.

அப்படித்தான் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலை பகுதியில் பலமாக நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்து வேகம் தாங்காது பத்து மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. ஆதலால் மாஞ்சோலை பகுதி மக்களுக்கு மாற்றுப் பகுதி மின் இணைப்பு உடனே வழங்கப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சாய்ந்து விழுந்த மரங்களும் மின் கம்பங்களும் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய மின்கம்பங்களை நடும் பணி நடந்தது.

கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலை எடும் பெருமாள் தலைமையில் தலைமையில் கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் திரு சங்கர் கல்லிடைக்குறிச்சி இளநிலை பொறியாளர் முன்னிலையில் கல்லிடைக்குறிச்சி உபகோட்ட மின் பணியாளர்கள் விரைவாக பணியில் ஈடுபட்டனர் .

விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து நேற்று மீண்டும் மணிமுத்தாறு மாஞ்சோலை மக்களுக்கு புதிதாக மின்சாரம் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்சாரம் என்னவென்றே தெரியாது மக்கள் வாழ்ந்தனர் அன்று. ஆனால் இன்றோ! ஒரு நிமிடம் கூட மின்சாரம் இன்றி வாழ முடியாது எனும் அவசியத்தை புரிந்து கொண்ட அரசு துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு மின்சாரம் சீரமைத்து தன் பணியை செவ்வனே செய்ததற்கு திருநெல்வேலி டுடே நன்றி தெரிவிக்கின்றது

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify