Logo of Tirunelveli Today

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா.

March 5, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா.

திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள்.

தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது.

பின்னர் மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மும், இரவில் பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் அகிலத்திரட்டில் அதிகம் வலியுறுத்துவது சமய புரட்சியா? சமுதாய புரட்சியா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியும், ஸ்ரீகுரு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விழாவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify