Logo of Tirunelveli Today

அயல்நாடு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள்

  • நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
  • கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்பு வெளிநாடுகளில் அதிகரித்து உள்ளது என அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு வனத்துறை முண்டத்துறை- களக்காடு புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கோட்டம் சார்பில் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு தலைமை தாங்கினார் . களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பக துணை வன பாதுகாவலர் அன்பு முன்னிலை வகிக்க , அரும்புகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ராஜ . மதிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் சூழல் இளையோர் விளையாட்டு
மன்றங்களை சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அறக்கட்டளை இயக்குனர் லதா மதிவாணன் வெளிநாட்டின் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். திருக்குறுங்குடி சூழல் வனசரகர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு பிறகு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அவர்கள் பேசியதாவது ;

வெளிநாடுகளில் கொரோனாவிற்கு பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது வெளிநாட்டிற்கு வேலை செய்ய விரும்புவோர் www.omcmanpower.com எனும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது எங்கள் நிறுவனம் மூலமாக குவைத்தில் செவிலியர்கள் 500 பேர் , மற்றும் துபாயில் வீட்டு வேலை செய்ய 500 பேர் வேலைக்கு எடுப்பதற்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டு அதற்கான ஆள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மொழி உச்சரிப்புக்கு ஏற்ப மொழி பற்றிய திறன் அறிந்திருக்க வேண்டும்.

வேலைக்கு செல்பவர்கள் அந்தந்த நாடுகள் வைக்கப்படும் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆகையால் சென்னை, மதுரை ,திருச்சி நாமக்கல் போன்ற இடங்களில் செவிலியர் கல்லூரிகளில் இதற்கான சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது . தமிழ்நாடு அரசு இதற்காக ரூபாய் 87 லட்சம் நிதி உதவி செய்துள்ளது என்று நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் கூறினார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வனக்குழுவினர் மற்றும் மலையோர கிராம மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify