Logo of Tirunelveli Today

வீரவநல்லூர் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் வசந்த சந்திரா தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் வீரவநல்லூர் பேரூராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் வசந்த சந்திரா ஆகியோர் தலைமை தாங்கினார்.

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு பற்றி அறிவுறுத்தப்பட்டது.

17 வது வார்டு பொது மக்களுக்கு கோல போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஓவியம் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பூங்காவின் பராமரிப்பு விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை எப்படி தரம் பிரித்து எடுக்கின்றோம் என்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது அதைப்போலவே உரப் பூங்கா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை எப்படி தரம் பிரித்து எடுக்கின்றோம் என்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து வீரவநல்லூர் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்திருந்தார்

வளரும் சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி ஊட்டுவதன் மூலம் நிச்சயம் ஒரு நல்ல முன்னேற்றம் காணும் என்பதை வலியுறுத்தி அரசு நடத்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பாராட்டுக்குரியது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify