தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசு சுகாதாரத்துறையின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான இலவச டயாலிசிஸ் திட்டம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த தனியார் மருத்துவமனைக்கான விருது தென்காசியில் உள்ள மீரான் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்களிடம் இருந்து மருத்துவமனை மருத்துவர் திரு.மீரான் அவர்கள் பெற்றுக்கொண்டார்.