Logo of Tirunelveli Today

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா

September 6, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் திங்கட்கிழமை அன்று ஆவணி மூலத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி கருவூர் சித்தருக்கு மானூரில் நெல்லையப்பர் காட்சி அருளிய நெகிழ்வான சம்பவ விழா கோலாகலமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஏராளமான பக்தர்கள் இந்த நாட்களில் கோவிலில் குவிந்த வண்ணம் வருகை புரிவார்கள் . இந்த வருடமும் நெல்லையப்பர் கோவிலில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

திருவிழா 26-8-2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது . 29ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா,வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் விநாயகப்பெருமானின் வீதி உலா மற்றும் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா என எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தந்தை சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார் .

3- 9 -2022 ஆம் தேதி திருநெல்வேலி நான்கு ரத வீதிகளிலும் கருவூர்சித்தர் வீதிஉலா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை அடைந்து தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது . 4- 9 -2022 ஆம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி தந்து சாப விமோசன நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தெற்கு செழியநல்லூர் ,மானூர் ,ரஸ்தா ,தென்கலம் தாழையூத்து மற்றும் அந்த பகுதிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் நெல்லையப்பர் கோவிலுக்கு வருகை புரிந்து நெல்லையப்பரை பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்தனர் .

Image source: dinamalar.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify