Logo of Tirunelveli Today

மங்களங்கள் கூடும் வாராஹி நவராத்திரி

July 1, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியாய் திகழ்பவள், கருணைக்கடல் அவள் கலை செல்வங்கள் அனைத்தும் கொடுக்கும் மாமகள் என்றெல்லாம் என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி சப்த மாதர்களில் தலைமை ஆனவள்.

தாருகாசுரனோடு போர் புரிந்த போது பரமேஸ்வரிக்கு துணை நின்றவள் வாராஹி அம்மன். சும்பாசுரனோடு சண்டிகா போரிலும் லலிதா பரமேஸ்வரிக்கு சேனா நாயகியாய் நின்று உதவியவள் எனும் பெருமைக்கு உரியவளே நினைத்த காரியத்தை ஜெயமாக்கும் வாராஹி அம்மன்.

சிங்கத்தை வாகனமாய் கொண்டு அண்ட சராசரங்களை காப்பவள் லலிதா பரமேஸ்வரி என்றால், அந்த அம்பிகையின் ரத, கஜ ,துரக, பதாதி எனும் நால்வகை படைகளுக்கும் தலைவி என்னும் பொறுப்பில் தண்டினீ ஆக இவள் பக்தர்களால் போற்றப்படுபவள் ஆகிறாள்.

ஆதிவாராஹி, உன்மத்த பைரவி ,பஞ்சமி, அஸ்வாரூடா வாராஹி,ஸ்வப்ன வாராஹி பல பெயர்களில் திகழ்பவள். அபிராமி பட்டரின் 'பஞ்சமி பைரவி பாசாங்குசை' எனத் தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலில் இவளை பற்றி போற்றிப் பாடுகிறார்.

இருகிய மனதை மென்மையாக்கி தெளிவிலா புத்தியை மிருதுவாக்கி அன்பு வளரவும் புத்தியில் இறை உணர்வு வளரவும் வழி செய்வாள்

இவளுக்கு மிகவும் பிடித்தமான நிவேதனங்கள் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றில் பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் .

அது தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயாசம், மிளகு சீரகம் கலந்திட்ட தோசை , தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்த்து ஆமைவடை, எருமைப்பால், எருமை தயிர் , எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை, சுண்டல் மற்றும் தேன் என பொருட்களை பூஜையில் வைத்து படைத்தால் அகம் மகிழ்ந்து அணைத்து வரங்களும் அவள் தருவாள்.

வெண் தாமரையும் செந்தாமரையும அவளுக்குரிய மலர்களாகும் . இரவுநேர பூஜை எனும் அம்மனுக்குரிய ஐதீக பூஜையில் அந்த மலர்களை நாம் சாற்றி, மனம் உருகி வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்று துன்பங்கள் யாவும் விலகி, வாழ்வில் அனைத்து சிறப்புகளும் பெற்று வாழலாம் . வாராஹி அம்மனை வழிபடுங்கள் வாழ்க்கையில் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கப்பெற்று வளம் காணுங்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify