Logo of Tirunelveli Today

போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் திரளாய் கூடிய மக்கள் கூட்டம்.

July 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி புறக்காவல் நிலையம் அருகில் தொடங்கியது.
  • போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் சிறப்பாய் நடைபெற்றது.

போதை எனும் பொருள் சமுதாயத்தை சீரழிக்க கூடியதாய் இருப்பதால் ,அதை அறவே நீக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் மிக பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி புறக்காவல் நிலையம் அருகில் தொடங்கியது .

முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் இந்த பேரணி தொடங்கப்பட்டது. கோபாலசமுத்திரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரராஜ் முன்னிலை வகிக்க , கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி தனி அலுவலர் மீனாட்சி பகுதி பொறுப்பாளர்கள் மரியமிக்கேல் ஜீவா , ஜெபமணி செந்தில்குமார் அருள்முருகன், கோபால் ஆகியோர் கருத்துரை ஆற்றினர் . கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.

திருநெல்வேலி கோபாலசமுத்திரம் பேரூராட்சி, சேரன்மாதேவி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம், மற்றும் கோபால சமுத்திரம் கிராம உதயம் இணைந்து200 குடிசைகள் வழங்குதல், 300 மரக்கன்றுகள் வழங்குதல் நடுதல் மற்றும் பராமரித்தல், பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு , துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முதலியவற்றை நடத்தியது .

கிராம உதயம் தன்னார்வத் தொண்டர் உச்சி மகாலி நன்றி கூறினார் . மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify