Logo of Tirunelveli Today

நெல்லை கல்லூரியில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 5, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை டி .டி .என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கல்லூரி முதல்வர் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விழாவை நடத்தி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுறத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளியூர் டி.டி. என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் தலைமை தாங்கினார்.

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் பிரகாசி என்ற தலைப்பில் உரையாற்றினார். வள்ளியூர் ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் சங்கத்தின் முன்னாள் தலைவர் செல்லப்பா சிறப்புரையாற்றினார் .

14 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து சதுரங்கம், பேச்சுப் போட்டிகள் அனைத்தும் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது. ஆறு பிரிவுகள் கொண்ட சதுரங்கப் போட்டியாக நடைபெற்றது. சீலாத்திக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றனர்.

'ஏ' பிரிவு போட்டியில் திசையன்விளை ஸ்டெல்லா மேரி மேல்நிலைப் பள்ளியும், 'பி' பிரிவு போட்டியில் விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் மேல்நிலைப் பள்ளியும் , 'சி' பிரிவு போட்டியில் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

நேரு நர்சிங் கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். கணிப்பொறியியல் துறை விரிவுரையாளர் உமா பரமானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார்‌. சிவில் துறை விரிவுரையாளர் பவித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்
1 2 3 20

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify