செய்திக் குறிப்புகள் :
- அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் நெல்லை மாவட்டத்தில் தொடரும் வெயிலின் தாக்கம்
- வியர்வை பயணத்தோடு குடை பிடித்து நடக்கும் அவதியில் நெல்லை மக்கள்
தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலங்களில் லேசாக மழை பெய்து வந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
காலை நேரத்தில் சூரியன் தாக்கம் அதிகமாகி நேரம் செல்ல செல்ல வெப்பம் அதிகமாகி வியர்வை பயணத்தோடு குடை பிடித்துக்கொண்டு செல்லும் அவதியுறும் நிலை நெல்லை மக்களுக்கு இப்போது நடந்து வருகிறது.
நேற்று நண்பகல் நேரத்தில் சாலையில் செல்வோர் வெயிலின் தாக்கத்தால்
பெரிதும் அவதிப்பட , காற்று புழுதி வாரித் தூற்றுவது போக்குவரத்து இடையூறாகவும் அமைந்தது .
நேற்று வெயில் அளவு 100 டிகிரி ஆக பதிவான இந்த நிலையில் உள்ள தென்மேற்கு பருவக்காற்று பருவ மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தை தணிக்க முடியும் என்பதால் மழை வருமா! குளிர்ச்சிதருமா! என மக்கள் எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெயில் காலத்தில் நோய் நொடிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள , ராஜகனி என அழைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இஞ்சியும், தேனும் சேர்த்து அடிக்கடி பருகி வாருங்கள் என திருநெல்வேலி டுடே பொதுமக்களை அறிவுறுத்துகின்றது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.