Logo of Tirunelveli Today

அம்பாசமுத்திரம் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

February 23, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • அம்பாசமுத்திரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு.
  • 14 வார்டுகளை கைப்பற்றி ஆளும் கட்சி முன்னிலை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகராட்சியின் 21 வார்டுகளுக்கும் கடந்த அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க 14 இடங்களிலும், அ.தி.மு.க 3 இடங்களிலும், காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:

வார்டு 1 - மாரிமுத்து (அ.தி.மு.க.), வார்டு 2 - செலின்ராணி (தி.மு.க.), வார்டு 3 - சிவசுப்பிரமணியன் (தி.மு.க.), வார்டு 4 - அனுசியா (தி.மு.க.), வார்டு 5 - அழகம்மை (தி.மு.க.), வார்டு 6 - கல்யாணி (தி.மு.க.), வார்டு 7 - ராமசாமி (தி.மு.க.), வார்டு 8 - சித்ராதேவி (சுயே.), வார்டு 9 - காதர்இஸ்மாயில் (தி.மு.க.), வார்டு 10 - தமிழ்செல்வி (சுயே.), வார்டு 11 - பேச்சியம்மாள் (காங்.), வார்டு 12 - கே.கே.சி.பிரபாகரபாண்டியன் (தி.மு.க.), வார்டு 13 - பேச்சிகனியம்மாள் (தி.மு.க.), வார்டு 14 -சவுராபானு (தி.மு.க.), வார்டு 15 - சிவக்குமார் (அ.தி.மு.க.), வார்டு 16 - முத்துலட்சுமி (ம.தி.மு.க.), வார்டு 17 - மாரியம்மாள் (தி.மு.க.), வார்டு 18 - லதா (தி.மு.க.), வார்டு 19 - ஜோதிகலா (தி.மு.க.), வார்டு 20 - வேலுச்சாமி (அ.தி.மு.க.), வார்டு 21 - முத்துகிருஷ்ணன் (தி.மு.க.)

Image source: Facebook.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify