Logo of Tirunelveli Today

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வேளாண் அதிகாரி ஆய்வு!

February 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • வெள்ளூர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு.
  • விவசாயிகள் ஆர்வமுடன் தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைத்துவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு திட்ட பணிகள் குறித்து களப்பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

இதில் வெள்ளுர் கிராமத்தில் புதிய நெல் ரக கருவிதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்ட அதிகாரிகள், அங்கு மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை பற்றி விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளிடம் விளக்கிக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) அல்லிராணி, துணை வேளாண்மை அலுவலர் சிவகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சண்முகம், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Image Source: dailythanthi

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify