Logo of Tirunelveli Today

முன்னோர்களின் ஆசியை நாம் பெறும் ஆடி அமாவாசையின் சிறப்பு

July 28, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை. சூரியனை பிதுர்காரகன் என்றும் , சந்திரனை மாதுர்காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறுகின்றனர். இந்த இரண்டு ஒரே நேர்கோட்டில் அமையும் தினமே அமாவாசை என்கின்றோம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடும் தினம்தான் அமாவாசை . பூர்வ புண்ணிய ஸ்தான பலம் குறைந்துவிட்டால் குடும்பத்தில் பல குழப்பங்களும் சுப தடைகளும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு பரிகாரம் தென்புலத்தார் அதாவது நம்முடைய முன்னோர்கள் மகிழ்ந்து ஆசி தரவேண்டும் அதற்கான சிறப்பான வழிபாடு தான் அமாவாசை

முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் படைக்க இயலாதவர்கள் வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் கண்டிப்பாக முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும் .

ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் அனைவரும் பூமியில் வருகின்றனர்‌ தை அமாவாசை அன்று பித்ருக்கள் நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்கின்றனர்.

அவர்கள் மகிழ்ச்சி அடைந்து வழி அனுப்பும் விதமாக நாம் அமாவாசை வழிபாடுகளை முறைப்படி செய்து முன்னோர்களை திருப்தி படுத்த வேண்டும் ‌.

அமாவாசை விரதம் என்பது யார் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்;

தாய் தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதம் இருத்தல் வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆணுக்கு தாய் இல்லை என்றாலும் தந்தை இல்லை என்றாலும் இருவரும் இல்லை என்றாலும் அவர்கள் கண்டிப்பாக அமாவாசை விரதத்தை கடைபிடிக்க வேண்டும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

உபவாசம் இருத்தல், எள்ளும் தண்ணீரும் இறைத்தல், கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றுதல் ,உணவு தானம் செய்தல் , பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தல், காகத்திற்கு அன்னம் வைத்தல், மற்றும் பைரவ வாகனம் நாய் பிஸ்கட் அல்லது உணவு வைத்தல் இவை அனைத்தும் நாம் அமாவாசை தினத்தன்று கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இந்த முறைகளை கடைப்பிடித்து, நம்முடைய முன்னோர்கள் ஆசி பெறுவது மட்டுமின்றி குலதெய்வத்தின் ஆசியும் நாம் பெற்று வாழ்வில் அனைத்து துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை காண்போம்.

Image source: dinakaran.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify