தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஆழமாக உணர செய்வது ஆன்மீகம். நாகரீகம் வளர்ந்து விட்டது. பண்பாடு குறைந்துவிட்டது. நம் முன்னோர் சொன்ன சொல் மறந்துவிட்டது.
எங்கே செல்கின்றது உலகம்! நம் வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கின்றது என உணர்கின்ற நேரத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு நம்முடைய விரத முறை வழிபாடுகள் மிக அவசியம்.
ஆம்! மாதம் தோறும் வணங்கி வழிபடக்கூடிய விசேஷமான விரத தினங்கள் சங்கடகர சதுர்த்தி, கிருத்திகை, அமாவாசை, பிரதோஷம், என இன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழிந்து கொண்டுதான் இருக்கின்றது.
தீபாரதனை சிறப்பாக நடக்கின்றது. விளக்குகளின் ஒளி தீபம் பக்தியின் ஒளிப்பிழம்பாக மிளிர்கின்றது. கலியுகத்தில் ஆயிரம் தவறுகள் நடந்தாலும் மனிதநேயம் ஆன்மீகத்தில் அதிகம் ஆட்சி செய்வது இன்றும் விரத தினங்களில் காணமுடிகின்றது.
விசேஷ தினங்களை மறவாதீர்கள். அன்றைய தினம் அறிந்து வீட்டில் அல்லது கோவிலில் அரைமணிநேரம் ஆன்மீகத்தில் மனதை ஆட்சி செய்யுங்கள் .
உங்கள் வாழ்க்கை மாறும். புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.
ஆணவம் அழிந்து, அமைதி பிறந்து, தானம் பெருகி, வாழ்வு வளமாகி செல்வச் சிறப்போடு வாழ்ந்து நல்வழிப் பாதையில் நடந்து சென்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வாழ்ந்த பயனை நிறைவு செய்யுங்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.