Logo of Tirunelveli Today

நெல்லை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா

August 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டம் அம்பை சின்ன சங்கரன் கோவிலில் நேற்று ஆடித்தபசு திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தனர் .

திருநெல்வேலி அம்பை தாமிரபரணி கரையில் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த வருடம் ஆடித்த பசு திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் 10 ஆம் திருநாள் தீர்த்தவாரி விழா நிகழ்ச்சியும், சிகர நிகழ்ச்சியாக தபசு திருநாளான நேற்று அதிகாலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளினாள். பின்னர் தபசு மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ,கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அம்பை, விக்ரமசிங்கபுரம் , கல்லிடைக்குறிச்சி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

இரவு 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .

அம்பை புது கிராமம் தெருவில் லட்சுமி நாராயண கோவில் அருகில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழாவும், வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்ப திருவிழா, பத்து மணிக்கு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகின்றது .

அரசு ஒத்துழைப்புடன் கூடிய ‌கோவில் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் சங்கு சபாபதி, சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் முருகசுவாமிநாதன் ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

Image source: tamiloneindia.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify