Logo of Tirunelveli Today

75வது சுதந்திர தின பவள ஆண்டு முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

August 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் முக்கூடலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி , அசோக காலச்சக்கரம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  • 75வது சுதந்திர தின பவள ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த விழாவில் சேரன்மகாதேவி சாரா ஆட்சியர் ரிஷாப் தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனம் சார்பில் அரங்கநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

75வது சுதந்திர தின பவள ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷாப் தலைமை தாங்கினார்.

ஆதரவற்ற முதியோர்கள், சாலை பணியாளர்கள், சொக்கலால் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் , பாதசாரிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் ஏ. ஆல்வின், வியாபாரிகள் சங்கத் தலைவர் பூமி பாலக பெருமாள் , கிராம நிர்வாக அலுவலர் பொன் பாண்டியன், ஆசிரியர் சிவன் பாண்டி , பொழில் அறக்கட்டளை தலைவர் ஹென்றி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Image source: tamil.news18.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify