கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி திருக்கோவிலில் நேற்று திருமுறை மன்றம் சார்பில் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்தங்களுக்கு நேற்று எட்டாவது ஆண்டு வருசாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 8.30 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, பூர்ணாகுதியும், காலை 10.00 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், அதனை தொடர்ந்து மதியம் அன்னதானமும், மாலை 5.00 மணிக்கு ஓதுவாரின் திருமுறை பாராயணமும், இரவு 7.00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். மாலை 5.00 மணிக்கு சங்கரன் ஓதுவார் திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு திருவீதி உலாவும் நடந்தது.