Logo of Tirunelveli Today

63 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தூண்டில் பாலம் விரைவில் சீர்படுத்தப்படும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்

May 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள்:

  • நெல்லையில் மே 26 வியாழக்கிழமை மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • மீனவர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு.

இடிந்த கரை ,உவரி , கூத்தங்குழி கூட்டப்புளி , பெருமணல் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்களும், மீனவ பிரதிநிதிகளும் பங்கேற்று பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்

மீனவ கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வராதது, பெருமணல் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் தூண்டில் பாலம் அமைப்பு, ரூ 63 கோடியில் உவரியிலா அமைக்கப்பட்ட தூண்டில் பாலம் சீரமைப்பு, இலவச வீட்டு மனை பட்டா நிலங்கள் அடையாளப்படுத்தல் ,பஞ்சல் கடற்கரைப் பகுதியை சுற்றுலாதலமாக அறிவித்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்தில் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அமுல் சேவியர் , ராதாபுரம் மீன்வள உதவி இயக்குனர் மோகன் குமார் வட்டாட்சியர் ராதாபுரம் சேசுராஜ் திசையன்விளை செல்வ குமார் , மீனவப் பிரதிநிதிகள் உவரி ரைமண்ட் முன்னாள் ஊராட்சி தலைவர் அந்தோணி, திமுக மீனவ அணி மாவட்ட செயலர் எரிக்ஜூடு, கூத்தங்குடி சூசை அந்தோணி, கவுன்சிலர் ராஜா , ஊராட்சி தலைவர் வளர்மதி கூடுதாழை அருணா டென்சிங், இடிந்த கரை ஊராட்சி தலைவர் சகாயராஜ் கூட்டப்பணி வினிங் அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மீனவர்களின் கோரிக்கை மனுக்களை ஏற்ற ஆட்சியர் பேசியதாவது…
.
மீனவ கிராமங்களில் தாங்கள் கொடுத்த கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடித் துறைமுகம் அமைப்பது, தூண்டில் பாலம் அமைப்பது, கடற்கரை கிராம இளைஞர்களுக்காக விளையாட்டு அகாதெமி, வேலைவாய்ப்பு பயிற்சி தொடங்குதல், பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் மற்றும் மீனவர்கள் மனுக்கள் அனைத்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் . மீனவ கிராமங்களில் கடவ சீட்டு முகாம் விரைவில் நடத்தப்படும் என்றார்.

ஆதரவு எதுவுமின்றி அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify